Thursday, July 18, 2013

வீழ்ந்தது முர்சி அல்ல; எகிப்தியரின் சுயமரியாதை


கான் பாகவி
முஸ்லிம் நாடுகளில் என்ன நடக்கிறது?’ எனும் ஒரு கட்டுரையில், அரபு வசந்தத்தின் பலனை முஸ்லிம் நாடுகள் அறுவடை செய்யவிடாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் தீய சக்திகள் மேற்கொண்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டியிருந்தோம்.

வசந்தத்திற்கு வித்திட்ட அதே எகிப்தில் இன்று தீயோரின் சதி இராணுவப் புரட்சிஎன்ற பெயரில் அரங்கேறத் தொடங்கிவிட்டது. நபிவழியான தாடியுடன் எழிலாகக் காட்சியளித்த அதிபர் முர்சி எங்கே? மழித்த முகத்துடன் காட்சிதரும் இடைக்கால இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே? ஏணி வைத்தாலும் எட்டாது.
அடப் பாவிகளா? ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, சரியான ஆட்சியை நடத்தத் தொடங்கி, எகிப்து குடிமக்கள் ஒவ்வொருவரும் இழந்த அடையாளத்தை மீட்டெடுக்க வழிகண்டு சமாதான பெருவாழ்வை வழங்க இருந்த ஒரு நல்ல ஆட்சித் தலைவரை அநியாயமாக அகற்றிவிட்டீர்களே!
உள்ளூர் கிப்தியரான ஆர்த்தோடக்ஸ் கிறித்தவர்கள் ஒரு பக்கம்; இவர்கள்தான், இராணுவப் புரட்சிக்கு முன்பு நடந்த கிளர்ச்சியில் கலந்துகொண்டோரில் 50 விழுக்காடாக இருந்தனர். இடதுசாரிகள் இன்னொரு பக்கம்; சியோனிஸ யூதர்கள் மறுபக்கம்; காலனி ஆதிக்க வெறியர்கள் இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் இராணுவத்தில் இருந்த கறுப்பு ஆடுகளை நன்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பது புரிகிறது.
அந்நூர்கட்சிக்கு என்ன வந்தது?

ஆனால், சலஃப் ஸாலிஹீன்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சியான அந்நூர்கட்சிக்கு என்ன வந்தது? எகிப்தில் நடந்த இராணுவப் புரட்சிக்கு அந்தக் கட்சியின் தலைவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்ளனரே! அதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஷைகு அப்துல் காலிக் அவர்கள் அக்கட்சியைக் கடுமையாக இப்படிச் சாடினார்; கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களுக்கெதிராகக் கிளம்பிய கவாரிஜ்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?
ஷைகு அப்துல் மக்ஸூத் அவர்கள் கூறினார்: எகிப்து இராணுவம் அந்நூர் கட்சியின் உறுப்பினர்களையும் பயன்படுத்தியே முர்சியை வீழ்த்தியுள்ளனர்; இக்வான்களை மறுபடியும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவருகின்றனர்.
அத்துடன் அக்கட்சியை ஹிஸ்புஷ் ஷைத்தான்’ (ஷைத்தானின் கட்சி) என்று அவர் சாடினார்.
இமாம் முஹம்மத் பின் சஊத்இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் ஹதீஸ் பேராசிரியர் டாக்டர், பன்தர் ஷுவைகீ கூறுகிறார்: அந்நூர்கட்சியினர், மதச்சார்பற்ற சக்திகளுக்கு வளைந்துகொடுக்கின்றனர் என்று நான் சொன்னபோது என்னைச் சிலர் விமர்சித்தனர். இப்போது உண்மை வெளிவந்துவிட்டது.
டாக்டர் ஷைகு கர்ளாவி அவர்களின் ஆதங்கம் இதோ: 90 ஆண்டுகால முடிச்சுகளை ஒரே ஆண்டில் எவ்வாறு அவிழ்க்க முடியும்? இவ்வளவு காலம் பொறுத்தவர்கள் இன்னும் சிறிதுகாலம் ஏன் பொறுக்கக் கூடாது? முர்சிக்குப்பின், மோசமானவர்களே அந்த இடத்தில் அமரப்போகிறார்கள்!

மீண்டும் பாதாளத்தில்
இந்த இராணுவப் புரட்சியின் மூலம் நாட்டை ஒரு நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டார்கள் என அல்முஜ்தமாவார ஏடு தலையங்கத்தில் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் ஐந்து மற்றும் ஆறாவது தசாப்தங்களின் காலத்தில் நடந்த இராணுவப் புரட்சிகளையே இது நமக்கு நினைவுபடுத்துகிறது.
எகிப்தில் அப்துந் நாஸிர், இராக்கில் சத்தாம் ஹுசைன், சிரியாவில் ஹாஃபிள் அசத், யமனில் அலீ ஸாலிஹ், அல்ஜீரியாவில் ஹவாரீ ஆகியோரின் ஆட்சியில் மக்கள் சந்தித்த அதே நாசத்தை இப்போது எகிப்தியர் சந்திக்கப்போகிறார்கள் என அல்முஜ்தமா அச்சம் தெரிவித்துள்ளது.
அடக்குமுறை, சிறை, கொடுங்கோன்மை, ஒட்டுமொத்த படுகொலை... இதைத்தான் மக்கள் அங்கே கண்டார்கள். இந்த ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை மேற்கத்திய காலனி ஆதிக்கத்திற்கு விற்றுவிட்டார்கள்.
இந்தக் கொடுங்கோலர்களின் புரட்சிகள், வரலாற்றின் குப்பைக் கூடைகளுக்குச் சொந்தமாகிவிட்டன. ஆம்! எகிப்தில், சியோனிஸ்டுகளின் கரத்தால் படுதோல்வி கண்ட அப்துந் நாசிர் வீழ்ந்தார். அமெரிக்கர்களின் கொடுங்கரத்தால் இராக்கில் சத்தாம் வீழ்த்தப்பட்டார்.
இதோ இப்போதும் சிரியாவில் அசத் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் யூதர்களும் மேலைநாட்டினரும் அவருக்குத் தோள் கொடுத்துவருகின்றனர். சிரியா மக்களோ அசதை வீழ்த்தாமல் ஓயமாட்டோம் என்ற உறுதியில் போராடிவருகின்றனர். யமன், லிபியா, துனூசியா ஆகிய நாட்டு மக்கள், தங்களின் கொடுங்கோல் மன்னர்களை விரட்டியடித்துவிட்டனர்.
ஆக்கப்பூர்வ திட்டங்கள்
அவ்வாறுதான், எகிப்தில் சர்வாதிகாரி ஹசனீ முபாரக்கை மக்கள் வீழ்த்தினர். எகிப்து வரலாற்றிலேயே முதன்முறையாக சிவிலியன் ஒருவர் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது இப்போதுதான். அவர்தான் முர்சி அவர்கள். அவர் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களைச் செயல்படுத்த விரிவாக ஆலோசித்தார்.
இத்திட்டங்கள் மட்டும் நடைமுறைக்கு வந்திருக்குமானால், மறைமுகக் காலனிவாதிகளை வெளியேற்றிவிட்டு, எகிப்தியரே தம் நாட்டின் தலைவர்களாக மாறியிருப்பார்கள்; எகிப்தின் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.
சூயெஸ் கால்வாயை ஆழப்படுத்தும் திட்டம், சினாய் புணரமைப்பு, கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு ஆகிய திட்டங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இவை, எகிப்து வரலாற்றில் எந்த ஆட்சியாளரும் நெருங்க முடியாமல்போன திட்டங்களாகும்.
இத்திட்டங்கள், காலனி வெறியர்களுக்குச் சிம்மசொப்பனமாக இருந்தவையாகும். இத்திட்டங்கள் நிறைவேறிவிட்டால், எகிப்தியர் சுய காலில் நிற்கத் தொடங்கிவிடுவர்; எழுச்சியைத் தொட்டுவிடுவர் என்பதே காரணம்.
எதிரிகள் கிழித்த இந்த சிவப்புக் கோட்டை அதிபர் முர்சி தாண்டினார். ஆக்கபூர்வமான அத்திட்டங்களைச் செயல்படுத்த வலுவான தேசிய திட்டத்தை நெஞ்சுரத்தோடு வகுத்தார். இதுவே எகிப்தின் எதிரிகளை நடுங்கவைத்தது. வெளிப்படையில் திட்டங்களை வரவேற்பதைப் போன்று எதிரிகள் நடித்தார்கள். முர்சிக்கு எதிராகக் கலவரங்களை மூட்டிவிட்டார்கள். இராணுவம் வந்தது. வழக்கமான நடைமுறைகள் அரங்கேறுகின்றன.
மீண்டும் வருவார்கள்

முர்சியும் இக்வான் நிர்வாகிகளும் வீட்டுக்காவலில். இந்த அக்கிரமத்தை வாழ்த்தி வரவேற்றவர்கள் யார் யார் தெரியுமா? ஆர்த்தோடக்ஸ் கிறித்தவர்களின் போப் டோல்ரூஸ்; இஸ்ரேல்; சியோனிஸ்டுகள்; எகிப்து இடதுசாரிகள். மேற்கத்திய நாடுகள் எதிர்த்தாலும் அந்தரங்கத்தில் வரவேற்கின்றன.
ஆனால், இக்வான்கள் இதைவிடப் பெரிய கொடுமைகளை அனுபவித்தவர்கள். மீண்டும் வருவார்கள் இன்ஷா அல்லாஹ்.

Friday, July 05, 2013

புனித ரமளானில் உங்கள் 24 மணி நேரம்

 - கான் பாகவி



பு
னித ரமளான் மாதம் வந்துவிட்டது; வசந்தத்திற்கான வாய்ப்பு வந்துவிட்டது. வாழ்நாள் முழுவதையும் ஒரே நாளாகக் கருத முடியுமா? பல மடங்கு நன்மைகளைத் தரும் நாளும் மற்ற நாளும் சமமாக முடியுமா?

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு ரமளானின் நாட்களைப் புண்ணியமானதாக ஆக்கிக்கொள்வதும் சுரணையே இல்லாமல் இந்நாளையும் அந்நாளைப்போல் வீணாகக் கழிப்பதும் நம் கையில்தான் உள்ளது.

புனித ரமளானில் செய்ய வேண்டிய முதல்தரமான வழிபாடு உண்ணா நோன்புதான்.

உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்! (2:185) என்பது இறைக்கட்டளையாகும்.

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு)முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்என்பது நபிமொழியாகும். (புகாரீ)

மற்றொரு நபிமொழி இவ்வாறு கூறுகிறது: சொர்க்கத்தில் ரய்யான்’ எனும் ஒரு நுழைவாயில் உள்ளது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறுயாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். (புகாரீ)



அடுத்து ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றல் மிகவும் முக்கியமானது. மூன்றாவதாக இரவுத் தொழுகை. இதில் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் அடங்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வழிபடுகிறாரோ அவர் முன்புசெய்த பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரீ)

அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஸ். இதில் அநேக பலன்கள் உண்டு. முக்கியமாக, மனஅமைதியும் தெளிவும் கிடைக்கும்.
திருக்குர்ஆன் கூறுகின்றது:

அல்லாஹ்வை நினைவுகூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலையையும் தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலையையும் ஒத்திருக்கிறது. (புகாரீ)

மற்றொரு ஹதீஸில், “தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவன்மீது கொண்ட அச்சத்தால்) கண்ணீர் சிந்தியவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷுடைய நிழலில் இடம் கிடைக்கும்என்று நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள். (புகாரீ)

அடுத்தது துஆ. பாவமன்னிப்பு (தவ்பா) நல்வழி (ஹிதாயத்), வாழ்க்கையில் வளம் (பரகத்), வாழ்வாதாரம் (ரிஸ்க்), ஆரோக்கியம் (ஸிஹ்ஹத்), கல்வி (இல்ம்) முதலான தேவைகளை முறையிட்டு அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். வேண்டுதல் ஏற்கப்படும் நாள் என்பதால், நல்ல பலன் கிடைக்கும்.

புனித ரமளான் மாதத்தில் அதிகமதிகம் குர்ஆன் ஓத வேண்டும். வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். (புகாரீ)

அவ்வாறே, ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அதிகமாக வாரிவழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். தொடர்ந்து வீசும் மழைக்காற்றைவிட அதிகமாக நல்லதை வாரிவழங்குவார்கள். (புகாரீ)

எனவே, ரமளானில் ஸகாத், ஸதகா, இஃப்தார் உணவு, ஸஹர் உணவு போன்ற தர்மங்களை இயன்றவரை அதிகமாகச் செய்ய வேண்டும். பேச்சைக் குறைத்து, பொய், கோள், புறம் ஆகியவற்றைக் கைவிட்டு நாவைப் பேணிக்கொள்ள வேண்டும்.

யார் (நோன்பு நோற்றுக்கொண்டு) பொய்யான பேச்சையும் அதன்படி செயல்படுவதையும் கைவிடவில்லையோ அவர் (வெறுமனே) தமது உணவையும் பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லைஎன்பது நபிமொழி. (புகாரீ)

கால அட்டவணை [TIME TABLE]


நோன்பு காலத்தில் இதோ இப்படி ஓர் அட்டவணையை வகுத்துக்கொண்டு செயல்பட்டால் என்ன? இதில் அவரவர் பணிகள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப சிறிது மாற்றம் செய்துகொள்ளலாம்!




Thursday, July 04, 2013

சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...


2050இல் ரஷியாவில் முஸ்லிம்கள் ஆட்சி

லக முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் டிரஸ்டிகள் கமிட்டி உறுப்பினரும் இஸ்லாமியச் சிந்தனையாளருமான டாக்டர் முஹம்மது அமாரா அண்மையில் தமது ஆய்வு ஒன்றை வெளியிட்டார்.

ரஷியா ஒன்றியத்தின் மக்கட்தொகை கணக்கெடுப்பு ஓர் உண்மையை வெளியிட்டுள்ளது. ரஷியாவை முன்பு தாத்தாரியர்கள் ஆட்சி செய்ததைப் போன்று 2050இல் முஸ்லிம்கள் ஆட்சி செய்வார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.

துருக்கி ஐரோப்பாவைச் சுமக்கிறது; ஐரோப்பா இஸ்லாத்தைச் சுமக்கிறது. அப்படியானால், எதிர்காலம் இஸ்லாத்திற்கே! என்று டாக்டர் அமாரா குறிப்பிட்டார்.

ரஷியாவில் சுமார் 20 மில்லியன் (2கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது, சோவியத் ரஷியா 15 குடியரசுகளாகப் பிரிந்த பின்னர் உள்ள நிலையாகும். தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

தற்போது ரஷிய முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றனர். இன்னும் ஏராளமான பள்ளிவாசல்கள் மீட்கப்படாமலேயே உள்ளன. 1917இல் நடந்த கம்யூனிஸப் புரட்சிக்கு முன்னர் ரஷியாவில் மொத்தம் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் இருந்தன. படிப்படியாகக் குறைந்து 80 பள்ளிவாசல்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

ரஷிய முஸ்லிம்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை, தேவையான அளவில் இமாம்களோ பிரசாரகர்களோ இல்லாததுதான். அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மையங்களும் கிடையாது.
கடின முயற்சிகளுக்குப் பிறகு இப்போது ரஷியாவெங்கும் 4 ஆயிரம் பள்ளிவாசல்கள்வரை மீட்கப்பட்டுள்ளன.



கெய்ரோவில் உலமாக்கள் மாநாடு

கிப்து தலைநகர் கெய்ரோவில் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் மாநாடு அண்மையில் நடந்தது. இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் டாக்டர் யூசுப் அல்கர்ளாவி மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

உலகளவில் 70 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளாக நூற்றுக்கும் அதிகமான உலமாக்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் சிரியாவில் நடக்கும் மக்கள் போராட்டம் தொடர்பாக விரிவான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தலைமை உரையாற்றிய டாக்டர் கர்ளாவி அவர்கள் தமது தலைமை உரையில், சிரியாவின் கொடுங்கோலன் பஷ்ஷார் அல்அசதுக்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு உதவி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தக் கொடுமைக்காரனுக்கு ஈரானும் ஹிஸ்புல்லாஹ்கட்சியும் இனரீதியாக உதவிவருகின்றன. இதைத் தடுத்துநிறுத்த வேண்டும். தன் சொந்த மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இஸ்ரேலுக்கெதிராக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் துணிவில்லாத பஷ்ஷார் சொந்த மக்கள்மீது அந்த ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கர்ளாவி கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் உம்மா சிரியா மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ முன்வர வேண்டும் என கெய்ரோ மாநாடு அழைப்பு விடுத்திருக்கிறது. பஷ்ஷாருடன் ஈரான், இராக், ஹிஸ்புல்லாஹ் ஆகிய ராஃபிளாக்களும் பாத்தினிய்யாக்களும் சேர்ந்துகொண்டு சன்னி முஸ்லிம்களைப் படுகொலை செய்துவருகின்றனர். ரஷியா மற்றும் சீனாவிலுள்ள சிலரும் ஒத்துழைக்கின்றனர்.

இது ஒரு இனப்படுகொலை. இந்த அநியாயத்தைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்படுவது முஸ்லிம் உம்மாவின் கடமையாகும் என மாநாடு தன் அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டது.




இராக்கில் மீண்டும் பஹாயிஸம் தலைதூக்குகிறது


ராக்கிலுள்ள குர்திஸ்தான் மாகாணத்தில் சத்தாம் காலத்தில் அடங்கிக்கிடந்த பஹாயிகள் இப்போது மீண்டும் தலைதூக்கிவிட்டனர். அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி பஹாயிகள் தம் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

உண்மையில் பஹாயிஸம்என்பது ஈரானில் முளைத்த பாத்தினீ’ (அந்தரங்கம்) இயக்கமாகும். ஷியாக்களில் ‘12’ பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆதராவகத் தோன்றியதே பஹாயிஸம். ஷைகு, கஷ்ஃப், பாபிய்யா என்றெல்லாம் அழைக்கப்படும் வரிசையில் வந்த இயக்கமாகும் இது. ஆரம்பத்தில் ரஷியாவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் வளர்த்த இவ்வியக்கத்தைப் பிற்காலத்தில் யூதர்களும் ஊட்டிவளர்த்தனர்.

முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் குழப்பம் ஏற்படுத்தவும் முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கவும் உருவாக்கப்பட்டதே இந்த பஹாயிஸமாகும்.

கி.பி. 1817இல் பிறந்த மீர்ஸா ஹுசைன் அலீ அல்மாஸன்தரானீ என்பவர்தான் பஹாயிஸத்தை ஆரம்பித்தார். இவரை பஹாஉல்லாஹ்’ (இறைவனின் சௌந்தரியம்) என்றழைப்பர். இவருடைய தந்தை பெரிய பண்ணை முதலாளி ஆவார்.

அத்வைதக் கொள்கையை வலியுறுத்திய மீர்ஸா ஹுசைன், எல்லா மதங்களும் ஒன்றுதான் என்றும் மக்களுக்கு மதரீதியான எந்தக் கட்டளையும் இல்லை என்றும் பிரசாரம் செய்தார். பாரசீகக் கவிதைகள், தீவிர சூஃபிஸம், ஷைகிஸம் போன்றவை தொடர்பான நூல்களைப் படித்துவிட்டு பஹாயிஸத்தை அவர் நிறுவினார்.

அவருடைய சகோதரர் மீர்ஸா யஹ்யா அலீ நிரந்தர விடியல்என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார். இவர்கள் தங்களுக்கு அஸலிய்யீன்’ (நிரந்தரமானவர்கள் அல்லது அழிவில்லாதவர்கள்) என்று பெயர் சூட்டிக்கொண்டனர்.

‘‘அல்லாஹ் முதலில் முஹம்மத் (ஸல்) அவர்களின் உருவில் வந்தான். அடுத்து இவர்கள் சொல்லும் 12 இமாம்களின் உருவில் தோன்றினான். முதலில் வந்தவர்களைவிட பின்னால் வந்தவர்களே மேலானவர்கள். அஹ்மத் இஹ்சாயீ (கி.பி. 1753-1826) ஷைக், எல்லா நபிமார்களையும்விடச் சிறந்தவர். சொர்க்கங்கள் இரண்டும் நரகங்கள் இரண்டும் உண்டு’’ போன்ற மூடக்கொள்கைகளைக் கொண்டவர்களே பஹாயிகள்.

பஹாயிஸத்தின் நிறுவனர் பஹாஉல்லாஹ் யூதர்களுடன் நெருங்கிய ரகசியத் தொடர்பு வைத்திருந்தவர். யூதப் பாதிரியான ஷம்ஊன் உஜாசீயுடன் பஃக்தாதில் பஹா நெருங்கிப் பழகினார். குர்திஸ்தானில் ஹாரூன் பார்சானி என்ற யூதக்குரு பஹாஉக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்துவந்தார்.

குர்திஸ்தான் மலைகளில் தலைமறைவாக வாழ்ந்த பஹா, அங்கே யூதப் பாதிரியான யூசுஃப் ஹாயீம் என்பாரிடம் ஆன்மிகப் பயிற்சி பெற்றார்.


(அல்முஜ்தமா)