Wednesday, January 27, 2021

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு

கூத்தூர் வாஹித் பாகவி மறைவு
~~~~~~~~~~~~~~
நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மெளலவி, அப்துல் வாஹித் பாகவி கடந்த 06.01.2021 புதன்கிழமை இறந்
துவிட்டார்.தகவல் தாமதமாகவே கிடைத்தது.

இவர் என் வகுப்புத் தோழர் மட்டுமன்றி ரூம் மேட் கூட.
பள்ளிப் படிப்பை முடித்தவர்.ஆங்கிலம் நன்கு கற்றவர்.1972ஆம் ஆண்டு ஸலஜ்னத்துல் இர்ஷாத் மாணவ மன்றச் செயலாளராக நன்கு செயல்பட்டவர். 

வேலூர் கல்லூரிகளில் நடக்கும் கவியரங்கம், கருத்தரங்கம்,பட்டிமன்றம் ஆகியவற்றுக்குப் சென்று வருவார்.

இந்த அனுபவத்தைக் கொண்டே எங்களாண்டில் மன்றத்தில் பட்டிமன்றம்  தொடங்கினோம் என்று நினைவு. அவ்வாறே கவியரங்கமும் நடத்தினோம்.

ஓதி முடித்தபின் சில இடங்களில் இமாமத் பணியாற்றியவர் , பின்னர் அரபு நாடு சென்றார். ஊர் திரும்பி நீண்ட நாள் ஓய்வில் இருந்தார்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நண்பர் மாரடைப்பால் கடந்த ஆறாம் தேதி இறந்துபோனார்.

அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள்.இருவருக்கும் திருமணமாகி குழந்தைகுட்டிகளுடன் நலமாக உள்ளனர்.

என் உற்ற நண்பரின் மறுமை வாழ்வு செழிக்க அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். 
اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين.
அன்புடன் உங்கள்
கான் பாகவி

No comments:

Post a Comment