Tuesday, June 01, 2021

~~~~~~~~~~~~~~~~~
குடும்பக் கட்டுப்பாடும் சீனாவும்
~~~~~~~~~~~~~~~~~~
மக்கட்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
 
இதையடுத்து அங்கு இளைஞர்களைவிட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. உழைக்க ஆட்கள் இல்லாமல் பொருளாதார தேக்க நிலை அங்கு உருவானது.

இதனால் 2016ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்தது. ஆனாலும் கடந்த ஆண்டு 1.2கோடி குழந்தைகளே பிறந்தனர்.

இது இப்போதுள்ள தேவையான அளவைவிட மிகவும் குறைவாகும் என அரசு கருதுகிறது. சீனாவின் மக்கட்தொகை 141 கோடியாக தற்போது உள்ளது. ஆண்-பெண் பாலின விகிதமும் குறைந்து வருகிறது.

பெரும்பாலான தம்பதியர் ஆண்குழந்தை களையே விரும்புகின்றனர். பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றிலேயே பெற்றோர் கொன்றுவிடுகின்றனர்.

இதனால் குடும்பக் கட்டுப்பாடு கொள்ள்கையைத் தளர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மூன்று குழந்தைகள் வரைப் பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

 *** 
வறுமையைப் பயந்து குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.( குர்ஆன்,17:31)
***
இரு பெண் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் எதிர்காலம் வரை அன்போடு பராமரித்து வளர்ப்பவர்கள் சொர்க்கம் செல்வர். ( நபிமொழி )

***

No comments:

Post a Comment