Wednesday, May 19, 2021

~~~~~~~~~~~~~~~~~~
ஹசனிகளின் தந்தை
மறைந்தார்
~~~~~~~~~~~~~~~~
பள்ளபட்டி உஸ்வத்துல் ஹசனா அரபிக் கல்லூரி நிறுவனரும் முதல்வரும் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞருமான மெளலானா அப்துர் ரஹீம் ரஷாதி அவர்கள் இன்று (19.05.2021) மறைந்தார் என்பதை பெருந்துக்கத்தோடு பதிவிடுகிறேன்.

இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றுதான் சொல்வேன்.காரணம் ஒரு கனவோடும் உயர்ந்த இலட்சியத்தோடும்  கல்லூரியை உருவாக்கி, அதன் கல்விக் கொள்கையைத் திட்டமிட்டு அமைத்து அதை இன்றுவரைச் செயல்படுத்தி, அமைதியானதோர் அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட பெரும் இலட்சியவாதி அவர்.

இன்றைக்கு அவர் பாசறையில் உருவான ஹசனி ஆலிம்கள் பல்துறைகளில் சாதனை படைத்துவருவது கண்கூடு.நத்வத்துல் உலமாவை முன்மாதிரியாகக் கொண்டு அரபி,உருது ஆகிய மொழிகளில் மாணவர்களுக்கு மொழி ஆற்றலை உருவாக்கியவர்.

நடுநிலைச் சிந்தனை, நிதானப் போக்கு, ஆய்வுத் தேட்டம், அறிவியலுடன் கூடிய  ஆன்மிகம் முதலான காலத்திற்கேற்ற கல்வி முறையை நிலைநாட்டியது அவர் செய்த சாதனையாகும்.

அவ்வாறே வணக்க வழிபாடுகளிலும் சுன்னத்தான வாழ்க்கை முறைகளிலும் ஈடுபாடு உள்ளவர். அவருடைய தந்தையார் பாகவி அவர்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.நான் பள்ளப்பட்டி மக்தூமிய்யாவில் ஆசிரியராகப் பணியாற்றியபோது என்மீது ஒரு தந்தையின் பாசத்தைக் பொழிந்தவர் அவர் தந்தை.

மெளலானா ரஷாதி அவர்களின் மறுமை வாழ்வு வளம்பெற துஆ செய்கிறேன்.

اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين.

No comments:

Post a Comment