Monday, February 01, 2021

கல்யாண ராமன் என்னசொல்கிறான் தெரியவில்லையா?

~~~~~~~~~~~~~~~~~~~
கல்யாண ராமன் என்ன
சொல்கிறான் தெரியவில்லையா?
~~~~~~~~~~~~~~~~~~~~
வருகின்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு யாரும் வாக்களிக்காதீர்கள். மீறி வாக்களித்தால் இதை விடக் கேவலமாக நடந்து கொள்வோம்.

உங்களை, சிறுபான்மையினரை,அவர்களின் மத உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்துவோம். காயம் உள்ளத்தில் மட்டுமல்ல;உடம்பிலும் இருக்கும்.

கூட்டணியில் உள்ள நாங்கள் இதைத் தைரியமாகச் செய்வோம். நீங்கள் சட்டத்தை நாடுவீர்கள். சட்ட அமல் எங்கள் கூட்டணியின் பெரிய கட்சியான அதிமுக இடம் இருக்கும். அதிமுக எங்களைக் காக்கும். தட்டிக்கொடுத்து ஆறுதல் சொல்லும்.

உங்கள் முயற்சிகளுக்கோ கூச்சலுக்கோ எந்நப் பயனும் கிடைக்காது.அப்படியானால் எங்களை அடக்கி வைக்கும் கூட்டணி எதுவோ அது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் . அப்போதுதான் நாங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்போம்.

நண்பர்களே! தமிழகத்தில் அமைதி நிலைக்க வேண்டுமென்றால் , மதச்சார்பற்ற கூட்டணி வென்றாக வேண்டும் என்பதைத்தான் அவன் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.

இன்றிலிருந்து, இப்பொழுதிலிருந்து தயாராகுங்கள் இந்தக் கழிசடைகளைத் தோற்கடிக்க! இளைஞர்கள், தாய்மார்கள், படித்தவர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடமும் இதையே சாக்காக வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

தமிழகத்தைப் பிடித்த பீடையை விரட்டுவோம்.
நல்ல விமோசனம் காண்போம் ;
இறை நாடினால்.

அன்புடன் உங்கள்
கான் பாகவி

No comments:

Post a Comment