Monday, February 08, 2021

தேன்கூட்டில் கல் எறிந்தகதையாகி விட்டது.

தேன்கூட்டில் கல் எறிந்த
கதையாகி விட்டது.
~~~~~~~~~~~~~~~~~~
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், விளக்கப் பொதுக்கூட்டங்கள், வரலாற்று உரைகள்,
நபிகளார் வரலாற்று நூல் வாசிப்பு...
என் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதோரும் நபிகளாரை வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழகத்தில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் இந்த மலர்ச்சியைக் காண முடிகிறது. மார்க்க அறிஞர்கள் பலதார மணம் குறித்தும் நபிகளார் துணைவியர் குறித்தும் நபிகளாரின் இல்லற வாழ்வு குறித்தும் புதிய கண்ணோட்டத்தில் உற்சாகத்துடன் ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது.

இதற்கெல்லாம் வழிவகுத்தவன் யார் என்று உங்களுக்குத் தெரியும். யோசிக்காமல்  தேன் கூட்டில் கல் எறிந்து விட்டான் ஆசாமி.

தீமையிலும் நன்மை உண்டு- என்பது 
இதுதானோ!

அன்புடன் உங்கள்
கான் பாகவி

No comments:

Post a Comment