Saturday, January 29, 2022

பன்முக வித்தகர் டிஜேஎம் ரியாஜி மறைவு

பன்முக வித்தகர் டிஜேஎம் ரியாஜி மறைவு
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

திருநெல்வேலி பேட்டை என்றவுடன் எங்களுக்கெல்லாம் நினைவில் வருவது மெளலானா TJm சலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் தான்.

பேட்டை மத்ரஸா வில் கல்வி கற்று பட்டம் வாங்கியதுடன் அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனியாக ஒரு மத்ரஸா தொடங்கி நடத்தியதுடன், எழுத்து, பேச்சு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கிய மூத்த மார்க்க அறிஞர் தான் அவர்.

மாணவர்களுக்கு மட்டுமன்றி, இளம் ஆலிம்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டி, ஊக்கத்தோடு செயல்பட வழிகாட்டிய பெருமகனார் இன்று மறைந்துவிட்டார்.

இத்தகைய தகுதிவாய்ந்த பெரியவர்கள் ஒவ்வொருவராக விடைபெறும் போதெல்லாம், எதிர்காலம் பற்றிய அச்சம் நம்மைத் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை. 

அன்னாரின் மறுமை வாழ்வு வசந்தமிக்கதாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக எனப் பிரார்த்திப்போம்.

அத்துடன் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளைச் சிரமேற்கொண்டு சீராகவும் சிறப்பாகவும் செயல்படுகின்ற நல்வாய்ப்பை நமக்கெல்லாம் இறைவன் வழங்குவானாக! எனவும் பிரார்த்திப்போம். 

அல்லாஹ் கருணை புரிவானாக!

அன்புடன் உங்கள்
கான் பாகவி
28.01.2022

No comments:

Post a Comment