Tuesday, January 11, 2022

இன்றைய தினமணியில் (10.01.22) வெளிவந்துள்ள செய்தி

இன்றைய தினமணியில் (10.01.22) வெளிவந்துள்ள செய்தியால் எந்த முஸ்லிமும் அதிர்ச்சி அடையப் போவதில்லை. காரணம், 15 நூற்றாண்டு நெடிய வரலாற்றில் இதுபோன்ற எத்தனையோ வித்தைகளை முஸ்லிம்கள் கண்டுள்ளனர். ஏனெனில், இஸ்லாத்தில் இவர்கள் இருந்ததாகக் கருதப்படும் நாட்களிலும் இவர்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தோர் அல்லர்.

இவர்கள் அமைப்பு தொடங்குவதற்குச் சொல்லும் காரணம்தான் வேடிக்கையானது. ஆம்! முஸ்லிம்களிடமிருந்து இன்னல்களைச் சந்திக்கிறார்களாம்.அவை அளவுக்கு அதிகமாக உள்ளதாம்.உடலளவிலும் மனத்தளவிலும் அச்சுறுத்தப்படுகிறார்களாம்! இதையெல்லாம் விட, சமூகத்தில் வாழ்வதற்கான அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகறார்களாம்!
இது உண்மையாகவே இருந்தாலும், இஸ்லாத்திலிருந்து வெளியோறிவிட்டு, முஸ்லிம்களின் அடையாளமான இஸ்லாமியப் பெயர்களிலேயே இருந்துகொண்டு, சமூகத்தோடு உறவாடிக்கொண்டே இருந்தால், பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற நிலைகளில் , நீங்கள் முஸ்லிம்கள் என்று நம்பி மற்றவர்கள் ஏமாந்து போவார்களா இல்லையா?

ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியது , பெயர் உட்பட முஸ்லிம் அடையாளங்களைத் துறந்து விடுங்கள். சமயமே வேண்டாம் என்றான பிறகு சமய அடையாளம் மட்டும் எதற்கு?
அவ்வாறு மட்டும் நீங்கள் செய்துவிட்டால் , உங்களை யாரும் சீண்டமாட்டார்கள்; சீந்தவும்மாட்டார்கள்.

நீங்களே சொல்லிவிட்டீர்கள்: முன்னாள் முஸ்லிம்கள்- என்று. அப்படியானால் இன்னாள் முஸ்லிம்கள் அல்லர். பிறகு எதற்கு பெயரும் அடையாளமும் முன்னாள்?

No comments:

Post a Comment