Thursday, November 08, 2018

செய்தித்தாள்களின் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப முடியாது'எனும் செய்தி படித்தேன்.எனக்கு வயது 65.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி வாசிப்பவன். 

வெளியூர் செல்லும்போது வாசிக்க முடியாது போனால் ஊர் திரும்பியவுடன் விட்டதைப் படித்துவிடுவேன்.காலையில் ஒரு கையில் தேநீரும் மறுகையில் பேப்பருமாக இருக்கும் ரகம்.

தினசரிக்கு விடுமுறை என்றால் அன்றைய நாள் முழுக்க எதையோ தொலைத்துவிட்ட பரிதவிப்பு ஏற்படும்.விடுமுறை என்பதை மறந்துவிட்டு செய்தித்தாள் போடப்படும் இடத்தைப் பார்த்து ஏமாந்து திரும்பிய நாட்கள் பல.

தகவல்களை முழுமையாக அறியவும் கூடுதல் அறிவுக்காகத் தலையங்கம், கட்டுரைகள் வாசிக்கவும் செய்திகளின் உண்மைத் தன்மையை எடைபோடவும் மிகையில்லாதவகையில் தகவல்களை அறியவும் தினசரிகளைப் போல் நல்ல வழிகாட்டி வேறு இருக்க முடியாது.

எல்லாவற்றையும்விட வாசிப்பில் இருக்கும் சுவை அலாதியானது.நின்று நிதானித்து வாசித்து விஷயத்தை உள்வாங்கி மனதில் பதிய வைப்பது போல் கற்றலுக்கான சிறந்த வழி வேறென்ன இருக்க முடியும்?

- அ. முஹம்மது கான் பாகவி

இராயப்பேட்டை, சென்னை

No comments:

Post a Comment