Sunday, August 11, 2019

தியாகமே வாழ்க்கையாய் தினந்தோறும்

**************************
தியாகமே வாழ்க்கையாய் தினந்தோறும்
**************************
# ஏக இறைக் கோட்பாட்டாளர்களின் தந்தையான இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

அன்னாரின் பிள்ளைகளான நம்மவர் வாழ்க்கையும் தினமும் தியாகத்தையே நினைவைட்டுகிறது.

இறையன்பைப் பெற,இறைச் சட்டத்தைப் பின்பற்ற, 'இறையடியான்' எனும் அடையாளத்தைக் காப்பாற்ற, இறைமறையைக் கற்க - கற்பிக்க ஒவ்வொரு நாளும் இங்கே நாம் போராட வேண்டியுள்ளது; உழைப்பை மட்டுமல்ல; உதிரத்தையும் சிந்த வேண்டியுள்ளது.

இது எதுவரை நீடிக்கும் என்று தெரியவில்லை.ஆனால் , எத்துணை நாளாயினும் தியாகங்கள் பல செய்து உரிமைகளை வென்றெடுப்போம் எனத் தியாகத் திருநாளாம் இந்நன்னாளில் சங்கல்பம் ஏகற்போம்.அதற்கான உறுதியை வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்கிடுவானாக என்ற துஆவையே பெருநாள் வாழ்த்தாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈத் முபாரக்.

- அன்புடன் உங்கள்
 அ.மு.கான் பாகவி.

+++++++++++++++++++

No comments:

Post a Comment