Tuesday, September 29, 2020

உலக மொழிபெயர்ப்பு நாள்-செப் - 30

~~~~~~~~~~~~~
உலக மொழிபெயர்ப்பு நாள்-செப் - 30
~~~~~~~~~~~~~
ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன.அதாவது இருபது விழுக்காடு. 
மூலநூலின் முழு உணர்வினையும் கருத்துகளையும் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும் அதிகப்படுத்தாமலும் மாற்றாமலும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலை உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்.

மூல மொழியின் கருத்தினின்று மொழிபெயர்ப்பாளர் மாறுபடின் , மொழிபெயர்ப்பாளரின் அறியாமையைத்தான் உணர்த்தும்.

நூற்றுக்கு நூறு கல்வி வளமும் நூற்றுக்கு எண்பது பேர் இரு மொழிப் புலமையும் நூற்றுக்கு எழுபது பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்பு செல்வாக்குப் பெறலாம்.

தமிழக அரசு மொழிபெயர்ப்புக்கு மட்டும் 11 விருதுகள் வழங்கிவருகிறது.

நன்றி:
முனைவர் ந.அருள்.
தினமணி-29.09.2020.

No comments:

Post a Comment