Saturday, December 22, 2018

சர்வாதிகாரத்தின் உச்ச கட்டம்

+++++++++++++++++++
# சர்வாதிகாரத்தின்
                 உச்ச கட்டம் #
+++++++++++++++++++
ஒரு நிறுவனம் அரும்பாடுபட்டு பெருநிதி செலவிட்டு ஒரு பிராஜக்ட்டை வெற்றிகரமாகத் தயாரித்து ,தன் விசுவாச ஊழியர்களுக்குக் கணினியில் அனுப்பிவைத்துக் கருத்துக் கேட்கிகறது.இது எப்படியோ போட்டி நிறுவனத்திற்குக் கசிய, பிராஜக்ட் உருவாக்கிய நிறுவன ஊழியர்களுக்கு வலைவீசுகிறது.அவர்களோ எதற்கும் மசியாத உண்மை விசுவாசிகள் என்பதை நிரூபிக்கின்றனர்.

இந்நிலையில்தான், நடுவண் அரசின் பத்து விசாரணை அமைப்புகளின் அதிகார வீச்சு போட்டி நிறுவனத்தின் நினைவுக்கு வந்தது.
ஐபி. என்சிபி. இடி. சிபிடிடி .டிஆர்யூ. என்ஐயூ .ரா. முதலான பத்து அரசு அமைப்புகள் எந்த கம்ப்யூட்டரையும் கண்காணிக்கலாம்.ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு ஏழாண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் புதிய சட்டம் போட்டி நிறுவனத்திற்கு வசதியாகப் போய்விட்டது.

இந்த அமைப்புகளின் அதிகாரிகளுக்குத் தரவேண்டியதைத் தந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் பிராஜக்ட் உருவாக்கிய கம்பெனியின் டேட்டா போட்டி கம்பெனியின் பாக்கெட்டில்.

இது என்ன அநியாயம் ?இது மட்டுமா ? கிளைண்டுகளுக்கு இது தெரிந்தால் இந்திய ஐடி கம்பெனிகளுக்கு யார் பிராஜெக்ட் கொடுப்பார்கள்? அல்லது நம் அதிகாரிகள் அப்படியொல்லாம் செய்யமாட்டார்கள் என்று சொல்வதற்கு அவர்கள் என்ன சொக்கத் தங்கமா?

சுருங்கச் சொன்னால் சர்வாதிகாரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறது இந்த அரசாங்கம்.
+++++++++++++++++++

No comments:

Post a Comment