Sunday, July 05, 2020

அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...

~~~~~~~~~~~~~
அன்பர்களே!விதியை வெல்ல முடியாது; என்றாலும் ...
~~~~~~~~~~~~~
அண்மைக் காலமாக வரும் மரணச் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 

உறவுகள், ஆசிரியர்கள், உடன் கற்றவர்கள்,நம்மிடம் கற்றவர்கள், சமூக ஆர்வலர்கள்,சமுதாயத் தலைவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், சாமானியர் ...என எல்லாத் தரப்பினரும் இந்தப் பெருநோயால் பாதிக்கப்பட்டும் பலர் உயிர்நீத்தும் வருகின்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதற்கு வயது வித்தியாசமோ பார்க்கின்ற தொழில் வித்தியாசமோ கிடையாது.தலைவிதி எதுவோ அது நடந்தே தீரும். யாராலும் ஒரு விநாடிகூடத் தள்ளிப்போட முடியாது. ஜனாஸாவைக்கூட உறவினரும் சம்பத்தப்பட்டவரும் பார்க்க முடியாத, இறுதிப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியாத பரிதாபம் இருக்கிறதே சொல்லிமாளாது.

இருப்பினும், நமக்கென சில தற்காப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவைதானே! அதைக் கடைப்பிடிப்பதில் நம்மிடம் கவனம் இருக்க வேண்டும் அல்லவா? 

முதலில் வெளியே போவதை இயன்ற வரை தவிருங்கள். அடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியமின்றி மேற்கொள்ளுங்கள். திக்ர் மற்றும் துஆக்களில் அதிகம் ஈடுபடுங்கள்.அலுவலகப் பணியை வீட்டில் அல்லது பாதுகாப்பான இடத்தில் செய்யுங்கள்.கரோனா தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்காதீர்கள். அதைப் பற்றியே எப்போதும் பேசாதீர்கள்.சிந்திக்காதீர்கள்.

இறுதியாக இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு ரிலாக்ஸாக இருங்கள்.உடன் இருப்போரையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஒளிந்திருந்த குகை வாயிலை எதிரிகள் ஆயுதத்துடன் நெருங்கிவிட்ட நெருக்கடியான நிலையிலும் தோழரிடம் , மூன்றாவதாக நம்முடன் இறைவன் இருக்கிறான் என்று நபிகளார் சொன்ன ஆறுதலை அடிக்கடி நினைத்துக்கொள்ளுங்கள்.

அனைவருக்கும் அவனே போதுமானவன். حسبنا الله ونعم الوكيل

அன்புடன் உங்கள் கான் பாகவி

No comments:

Post a Comment