Thursday, April 18, 2019

# பூத்தில் கான் பாகவிக்கே இந்நிலை என்றால்..?

# பூத்தில் கான் பாகவிக்கே இந்நிலை என்றால்..?
+++++++++++++++++
இன்று (18.4.2019)காலை 11.00 மணியளவில் மத்திய
சென்னை தொகுதி இராயப்பேட்டை டாக்டர் பெசண்ட் சாலை என்.கே.டி.பள்ளியில் 132ஆவது வார்டுக்கான பூத்தில் கான் பாகவி,துணைவியார், மூத்த மகன் , மருமகள் ஆகிய நான்குபேர் வரிசையில் நின்று வாக்களிக்க கையில் வாக்காளர் அட்டையுடன் காத்திருந்தனர்.

அறைக்குள் நுழைந்தவுடன் கான் பாகவியின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பூத் அதிகாரி பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றார்.அதே பதில்தான் குடும்பத்தார் அனைவருக்கும் சொல்லப்பட்டது.

கோபமடைந்த கான் பாகவி , இதே முகவரியில் இதற்கு முன் பல தேர்தல்களில் வாக்களித்துள்ளோம்.ஆன்லைனில் பல தடவை பரிசோதித்து பெயர் இருப்பதை உறுதி செய்துள்ளோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த பரிசோதகர் பட்டியலைப் பார்த்துப் பெயர் இருப்பதை உறுதி செய்துள்ளனர் என்றெல்லாம் எடுத்துச் சொல்லியும் அதே பதிலை அதிகாரியும் பூத் ஏஜண்டுகளும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

கோபம் அதிகமான கான் பாகவி குரலை உயர்த்தி ஆவேசத்தோடு பேச ஆரம்பித்தார்.வொட்டுப்போடாமல் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம்.எங்கள் அடிப்படை உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம்.இப்படித்தான் சிறுபான்மை மக்களை நசுக்கப்பார்கீகிறீர்கள்.இரண்டில் ஒன்றுதெரியாமல் செல்லமாட்டோம் என்று சப்தமிட்டுக்கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தார் கான் பாகவி.

வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களிடமும் இந்த அநியாயத்தை எடுத்துச்சொன்னார்.இதற்கிடையில் பட்டியலைத் தேடிப்பார்த்த பூத் அதிகாரி உள்ளே அழைத்து உங்கள் பெயர் இருக்கிறது.ஆனால் டெலிட் செய்யப்பட்டுள்ளது.இன்னும் ஆவேசமடைந்த கான் பாகவி ,எங்கள் பெயரை யார் எதற்காக டெலிட் செய்தார்கள்.முஸ்லிம் பெயரைப் பார்த்தவுடனேயே டெலிட் செய்துவிடுவீர்களா ? இங்கே எங்களுக்கு கொடுமை இழைக்கப்படுகிறது என்று குரல் எழுப்பினார்.

அதுதான் பெயர் கிடைத்துவிட்டதே !வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள் என்றார் அதிகாரி.இத்தனை போராட்டத்திற்குப் பிறகு அனுமதிக்கிறீர்கள்.இப்படி எத்தனை அப்பாவிகளுடைய பெயரை நீக்கினீர்களோ ! அவர்களும் பேசாமல் திரும்பிப் போயிருப்பார்கள்தானே என்று கேட்டுவிட்டு , இயந்திரத்தில் பெட்டியைச் சரியாகப் பார்த்து வாக்களித்துவிட்டு வெளியேறினர்.
### மக்களே உஷார் ! உரிமையை விடாதீர்கள் !

1 comment:

  1. எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு குரல் கொடுத்ததற்காக தேர்தல் ஆணையம் பழி வாங்கும் போக்கை கையாளுகிறது என்று யாரும் அறிக்கை விட்டு, இதிலும் ஹஜ்ரத் அவர்களின் பெயரை வைத்து ஆதாயம் தேடுவார்களோ என்ற கவலையும் எனக்குள் எழுகிறது.

    - பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

    ReplyDelete