Sunday, September 22, 2019

அனைவருக்கும் நன்றி

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
அனைவருக்கும் நன்றி
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

என் இரு கண்களிலும் ஏற்பட்டிருந்த கடினமான புரைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, பரிபூரண குணம் கிடைத்து இறையருளால் முழுப் பார்வையும் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

தொடர்ந்து சில வாரங்களுக்கு மெடிஸன் கையாள வேண்டும். இன் ஷா அல்லாஹ் நாளை ( 23.09.2019 ) முதல் அலுவலகப் பணிக்குத் திரும்பிவிட்டேன். விழிகளுக்கு அதிகச் சுமை கொடுக்கக் கூடாது என்பது மருத்துவர் அறிவுரை.

என் கண் நலத்திற்காகவும் மார்க்கப் பணி தொடர்வதற்காகவும் பிரார்த்தித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அதற்கான கூலியை உங்கள் அனைவருக்கும் வழங்கட்டும்.! வஸ்ஸலாம்.
++++++++++++ உங்கள் அன்பு கான் பாகவி.

No comments:

Post a Comment