Sunday, February 02, 2020

வரிச்சலுகை உண்மையா?

∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
வரிச்சலுகை உண்மையா?
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

பாஜக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் ஒரு பொய்த்தோற்றம் ஆகும்.காரணம், புதிய வரி விதிப்பின்படி உட்சபட்ச சேமிப்பு ரூ.62,400தான்.

ஆனால் பழைய வரிவிதிப்பின்படி உச்சபடசமாக 80-சி பிரிவின் கீழ் சுமார் ரூ.4லட்சம்வரை முதலீடு காட்டி சலுகை பெற முடியும்.

அப்படிப் பார்க்கும்போது பழைய வரியே மேல் என்கின்றனர் மாதாந்திர ஊதியம் பெறுவோர்.இதை உறுத்திப்படுத்துகிற வகையிலேயே நிதி அமைச்சரின் இன்னொரு அறிக்கை அமைந்துள்ளது.

புதிய முறைப்படி பல்வேறு வரிவிலக்குகள் மற்றும் சலுகைகள் பெற முடியாது என அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.அத்துடன்,இந்த இரு வரிவிதிப்பு முறைகளில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுக்கலாம் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.

இரண்டும் அரசுக்குச் சாதகம்தான் என்று இல்லாவிட்டால் இப்படி அறிவிப்பாரா நிதி அமைச்சர்.

ஆயுள் காப்பீடு பிரீமியம்,வருங்கால வைப்பு நிதி,வங்கி டெபாசிட் , குழந்தைகளின் கல்விக் கட்டணம் உள்ளிட்ட ரூ.1.5லட்சம்வரையிலான சலுகை புதியதில் கிடைக்காது. 

வீட்டுக்கடனுக்கான ஊக்கத்தொகை -ரூ.2லட்சம்,வீட்டு வாடகை,மருத்துவக் காப்பீடு, நிலைக்கழிவு ( டிஸ்கவுண்ட்) -ரூ.50 ஆயிரம் ஆகிய வரிச் சலுகைகளையும் புதிய முறையில் பெற முடியாது.

இப்போது சொல்லுங்கள்: இது சலுகையா? தந்திரமா ?
- அன்புடன் உங்கள்
கான் பாகவி

No comments:

Post a Comment