Tuesday, October 12, 2021

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை

நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெங்களூரில்  10.10.2021 நடந்த உலக மனநல நாள் விழாவில் பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள நவீன பெண்களில் பெரும்பாலோர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வே விரும்புகிறார்கள்.இதைக் கூற வருத்தமாக இருக்கிறது.

ஒரு வேளை திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. வாடகைத் தாய் மூலமே குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கவே விரும்புகிறார்கள்.

நமது சிந்தனையில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இது சரியான போக்கு அல்ல.மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை இந்திய சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது துரதிருஷ்ட வசமானது

தாத்தா, பாட்டி உடனிருப்பதை விரும்பாத அவர்கள், தாய் தந்தையரை உடன் வைத்துக் கொள்ளத் தயங்குவது வேதனை அளிக்கிறது.

(நன்றி-தினமணி )

No comments:

Post a Comment