Tuesday, October 19, 2021

ஆலிம் பப்ளிகேஷனின் இதயங்கனிந்த நன்றி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஆலிம் பப்ளிகேஷனின்
இதயங்கனிந்த நன்றி
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறையருளால் 16.10.2021 காலை எமது ஆலிம் பப்ளிகேஷனின் வெளியீடான முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எமது அன்பு அழைப்பை ஏற்று விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அறிஞர் பெருமக்கள், விழாவை மிக வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அப்பகுதி பிரமுகர்கள், விழாவில் திரளாகக் கலந்துகொண்ட ஆலிம்கள், பட்டதாரிகள்,வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முதலான அனைத்து  அன்பர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம்.

பாளையங்கோட்டையில் பிரபலமானதும் பிரமாண்டதுமான காயிதே மில்லத் moc அரங்கத்தை வழங்கி உதவிய நிர்வாகப் பெருமக்கள், நூல் தயாரிப்புச் செலவினங்களுக்கு வாரிவழங்கிய புரவலர்கள், எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று சிரத்தையோடு கவனமாகச் செய்த பெருந்தகைகள், மக்களுக்கு விழா குறித்துப் பள்ளிவாசல்களில் அறிவிப்புச் செய்து உதவிய இமாம்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலிம் பப்ளிகேஷன் மொழிபெயர்ப்புக் குழுவினர் மற்றும் நிர்வாகக் குழுவினர் சார்பாக  இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிப்பதில் அகமகிழ்றோம்.
ஜஸாகுமுல்லாஹு கைரல் ஜஸா ஃபித்தாரைன்.

நம்  தொடர்புகள் தொடரட்டும்! தொண்டுகள் சிறக்கட்டும்!
நபிகளாரின் பொன்மொழிகள் அனைவரின் வாழ்க்கையாக மாறட்டும்!
 வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment