Tuesday, March 10, 2020

அனைத்து ஆலிம்களும்அவசியம் ஆஜராகுஙகள்

~~~~~~~~~~~~~~~~
அனைத்து ஆலிம்களும்
அவசியம் ஆஜராகுஙகள்
~~~~~~~~~~~~~~~~
இன் ஷா அல்லாஹ் வருகின்ற 14.03.2020 சனிக்கிழமை மாலை 6.00மணிமுதல் 9.00மணிவரை சென்னை மண்ணடி மஸ்ஜித் லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளிவாசலில் நடைபெறவுள்ள எங்கள் ஆசிரியர் பெருந்தகை 
மெளலானா பி.எஸ்.பி. ஜைனுல் ஆபிதீன் ஹள்ரத் அவர்களின் சுயசரிதை நூல் வெளியிடப்பட உள்ளது.

அன்னாரே தம் நாவால் சொல்லச் சொல்ல அன்புத் தம்பி மெளலவி கலீலுர் ரஹ்மான் மன்ப ஈ அவர்கள் வாசகம் அமைத்துத் தொகுத்துள்ளார்.

அத்தோடு ஹள்ரத் அவர்களின் என் போன்ற மாணவர்கள் ஹள்ரத் அவர்கள் பற்றி எழுதியுள்ள சுவையான சம்பவங்கள் கொண்ட கட்டுரைகளும் நூலில் இடம்பெறுகின்றன.

நம் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த ஆலிம் பெருமகனாருக்குப் புகழ் சேர்க்கும் இவ்விழாவில் எல்லா ஆலிம்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்ப்பது கடமையல்லவா? 

இன்றைய இளம் ஆலிம்கள் பெரும்பாலும் அன்னாரின் மாணவர்களாக, மாணவர்களின் மாணவர்களாக இருப்பர். இரண்டு மூன்று தலைமுறைகளைக் கண்ட ஹள்ரத் அவர்களின் சுயசரிதை நம் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பாடமாக இருக்கும்.இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்.

காலையிலிருந்து தொடங்கும் நிகழ்ச்சிகளில் பல ஆலிம்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.

ஒருவர் , அதிலும் மார்க்கத்திற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு பெருந்தகை வாழ்வில் சந்தித்த மேடு பள்ளங்கள்  இளையவர்களுக்குச் சிறந்த பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாருங்கள்! நாமும் வாழ்ந்து பார்ப்போம் !

- உங்கள் அன்பு 
கான் பாகவி
~~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment