Sunday, April 26, 2020

தீமையிலும் ஒரு நன்மைஉண்டு!

~~~~~~~~~~~~
தீமையிலும் ஒரு நன்மை
உண்டு!
~~~~~~~~~
நான் மாணவனாக இருந்த சமயம் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் எங்கள் மாணவ நண்பர்களின் ரமளான் பொழுதுகள் இனிமையாகக் கழிந்ததுண்டு.

அருகில் உள்ள புதுப்பட்டி எனும் சிற்றூரில் ஒரு சிறிய மஸ்ஜித். அங்கு ஹாஃபிழ் வைத்து தராவீஹ் நடத்தும் அளவுக்கு வசதியில்லை.நாங்கள் சில மாணவர்கள் சேர்ந்து தராவீஹ் நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம்.

ரக்அத்களைப் பிரித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று பேர் தொழவைப்போம். அந்த எளிய மக்களுக்கோ ஆனந்தம்.தங்கள் மஹல்லாவிலும் சிறப்புத் தொழுகை நடக்கிறதே!

இப்படி சில ஆண்டுகள்.நானும் இமாமத் செய்தேன் மனநிறைவோடு. அதற்குப் பிறகு இமாமத்திற்கான வாய்ப்பு வாய்க்கவில்லை. நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுவதை விட்டதில்லை. அதில் அவ்வளவு ஓர் ஆனந்தம்; மனநிறைவு.

  இந்த ஆண்டு வந்ததே வைரஸுடன். பேரிடிதான். நினைத்தும் பார்க்கவில்லை. பள்ளியில் தொழமுடியாதென்று. நொந்து போனேன்.

திடீரென ஒரு யோசனை. இல்லத்தில் ஆறு பேர். ஏன் நாமே இமாமாக நின்று ஜமாஅத்தாகத் தொழக்கூடாது? அதையே நடைமுறைப்படுத்திவருகிறேன். மகிழ்ச்சியாக கழிகிறது ரமளான்.

ஆனாலும் என்ன? முழு குர்ஆன் ஓதி தொழமுடியவில்லை. சின்னச் சின்ன சூராதான். இதுவே என்ன கஷ்டமாக இருக்கிறது தொரியுமா?

இப்போதுதான் தெரிகிறது இமாமத் எவ்வளவு பெரிய மகத்தான பணி! அதிலும் ஹாஃபிழ்கள் பாடு எவ்வளவு பெரியது!

எப்படியோ கரோனா தீமையிலும் எனக்கொரு நன்மை!

அன்புடன் உங்கள் கான் பாகவி.

No comments:

Post a Comment