Sunday, April 19, 2020

மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே

~~~~~~~~~~~~
மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே
~~~~~~~~~~~~
பேரா.க.பஞ்சாங்கம்

மொழிபெயர்ப்பும் ஒரு கலையே; மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளியே என்ற கருத்துதான் இன்றைக்கு வலுவாக நிலைப்பெற்றுள்ளது.

       மூல நூலாசிரியரும் , மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.மொழிபெயர்ப்பாளரும் மொழியாலான உலகத்தின் மேல்தான் வினை புரிகிறார்.

மொழிபெயர்ப்பாளருக்கு மூல நூலாசிரியர் உருவாக்கித்தந்த மொழி உலகம் வெளிப்படையாக முன் நிற்கிறது.மூல ஆசிரியருக்கு அவர் முன்னோர்கள் உருவாக்கித்தந்த மொழி உலகம் மறைவாக நிற்கிறது.அவ்வளவுதான்
வேறுபாடு. எனவே, பெரிதாக இருவருக்கும் இடையில் உயர்வு/தாழ்வு கற்பிக்கப் தேவையில்லை.

ஆக, மொழிபெயர்ப்பு என்பது, சிரமம் என்று கருதினால் சிரமம். அதேநேரத்தில்,ரசித்து இறங்கிவிட்டால் ,அதைப்போல சுவாரஸ்யமான பணி எதுவுமே இருக்க முடியாது.

மொழிபெயர்ப்பாளருக்குப் பன்மொழிப் புலமை இருந்தாக வேண்டும்.அது மட்டுமே மொழிபெயர்ப்பாளராகத் தகுதியா என்றால் அதுவும் இல்லை. மொழி
ஆளுமை வேண்டும். ரசனையும் வேண்டும்.

No comments:

Post a Comment