Friday, February 11, 2022

இன்றைய ஜும்ஆ உரை
யூனிடி பள்ளிக்கூடப் பள்ளிவாசலில்- 
கான் பாகவி
~~~~~~~~~~~~~~~~~~~
சென்னை கோட்டூர்புரம் யூனிடி பள்ளிக்கூடம் இன்று -11.02.22 வெள்ளிக்கிழமை சென்றிருந்தோம். பள்ளியின் அரபித் துறை தலைவர் உஸ்தாத் ஷமீம் அவர்களின் அழைப்பை ஏற்று நான், மொழிபெயர்ப்பாளர் அப்துல்லாஹ் பாகவி,நூல் டிவமைப்பாளர்  ஹைதர் அலி ஆகியோர் சென்றோம். அங்கு திரளாகக் கூடியிருந்த பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, இடைவெளிவிட்டு அணியணியாக அமர்ந்திருந்த காட்சியே பார்க்க இதமாக இருந்தது.

நான்தான் ஜுமுஆ உரையாற்றினேன்.உரையைக் கவனமாகக் கேட்டனர். இனிய குரலில் உஸ்தாத் ஒருவர் தொழவைத்தார்.
பிறகு  பள்ளி முதல்வர் ,அரபித் துறை ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடந்தது. அலிஃப் , பா வில் தொடங்கி தஜ்வீத், தர்த்தீல், தஹ்ஃபீழ் என ஒவ்வொரு செகஸனைப் பற்றியும் உஸ்தாத்கள் ஷமீம்,தர்வேஷ் ஹசனீ ஆகியோர் விளக்கிவந்தனர்.

அடுத்து அரபி மொழி பாடங்கள் பற்றிப் பேசலயி‌னர். ஆரம்ப வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரைக்கும் உஸ்தாத் ஷமீம் குழுவினர் தயாரித்துள்ள   பாடப்புத்தகங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை.

அரபியை வாசிக்க, எழுத கற்பிக்கும் நூல் முதல், இலக்கணம், இலக்கணப்
பாடங்கள், பயிற்சிகள் முதலான அனைத்தும் நவீன/தற்கால பயன்பாட்டிற்கான அரபியில் வரையப்பட்டிருப்பதுடன்,. மார்க்க நம்பிக்கை, வழிபாடு, வரலாறு, ஒழுக்கம், பண்பாடு ஆகிய பயன்மிக்க விவரங்களைக் கொண்டவையாக இருப்பது அற்புதத்திலும் அற்புதம்.

இத்தனைக்கும் பள்ளிப் பாடத்திட்டம் CBSE சிஸ்டம் என்பது  குறிப்பிடத்தக்கது
 ஆக, கல்வி, மொழிப் பயிற்சி,
 நல்லொழுக்கம், மார்க்க வழிகாட்டல்...என் எல்லாம் ஒன்றினைந்த முன்மாதிரியான பள்ளியாக அது விளங்குவதைக் கண்டறிந்து விடைபெற்றோம்.

அரபி மொழியியல் பாடங்களை நடத்திவரும் பள்ளிகள் சென்னை யூனிடி பள்ளியின் பாடப்புத்தகங்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்துப் பயனடைய வேண்டும் என்பது எமது அன்பான வேண்டுகோள் ஆகும். வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment