Saturday, February 19, 2022

சென்னை மாநகராட்சித்
தேர்தலில் வாக்களித்தோம்
*******************************
சென்னை மாநகராட்சி வார்டு எண் 115இல் குடும்பத்துடன் பிரச்சினை ஏதுமின்றி குடும்ப சகிதம் சுமுகமாக வாக்களித்தோம். 

காலையிலேயே சென்றுவிட்டதால் நெரிசல் இல்லை. கூட்டம் குறைவாகவே இருந்தது. பரபரப்பு இல்லை. வாக்காளர்களிடம் ஆர்வமும் காணப்படவில்லை.

வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் யாரையும் வெளியே காண முடியவில்லை. அதிகாரிகள் சிலர் மட்டுமே பூத்திற்கு வெளியே காணப்பட்டனர்.சொல்லப்போனால் இந்த அமைதியான சூழல்தான் தேவை.

பார்ப்போம்! தேர்தல் முடிவுகளை. இனி இவர்கள் கூடி மேயர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மறைமுகமாக 
தேர்ந்தெடுப்பர். இந்தத் தேர்வும் சுமுகமாக அமையட்டும்!

பிறகு ஏன் சில சிற்றூர்களில் பிரசாரத்தின் போது கைகலப்பும் சலசலப்பும் ஏற்பட்டன?என்று தெரியவில்லை.

எப்படியாயினும், வெல்வோர் யாராக இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதிலும் வார்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும், யாரிடமும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் கடமை ஆற்ற வேண்டும் என எதிர்பார்ப்போம்.

அன்புடன் உங்கள்
கான் பாகவி

No comments:

Post a Comment