Saturday, September 15, 2012

செப்டம்பர் 11-ம் ஷைத்தான்களின் சூழ்ச்சிகளும்


அ. முஹம்மது கான் பாகவி

செப்டம்பர் 11-ல் ஆண்டுதோறும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்-11 நினைவு தினத்தில் கோரமான காட்சிகள் அரங்கேறின; உலக முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சும் கொடூரக் காட்சிகள் திரையிடப்பட்டன.

FILM PRODUCER STEVE - KLEIN

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் பேராயர் தேவாலயத்தின் உள்ளே செப்டம்பர் தாக்குதல் சம்பவங்களின் நினைவுக் கூட்டம். கூட்டத்தை நடத்தியவர்கள், எகிப்து நாட்டைப் பிரித்து, தனியான ‘கிப்தி’ நாடு உருவாக்க வேண்டும் என்று கேட்கும் எகிப்து அரபு கிறித்தவர்கள். இவர்கள் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்துவிட்டவர்கள்.

PASTOR TERRY JONES
இவர்களில் மோரிஸ் ஸாதிக் முக்கியமானவர். இவரது குடியுரிமையை எகிப்து அரசு பறித்து நாட்கள் பல ஆகிவிட்டன. மற்றொருவர் இஸ்மத் ஸக்லமா. இவர்தான், உத்தேச கிப்தி நாட்டிற்கான உயர்மட்டக் குழுவின் தலைவர். இவர்களுடன் அமெரிக்க தீவிரவாதியும் பேராயருமான டேரிஜோன்ஸும் சேர்ந்துகொண்டார். இவர்தான், திருக்குர்ஆன் பிரதிகளை எரியுங்கள் என்று பிரசாரம் செய்பவர்.

அன்றைய நிகழ்ச்சியின் பெயர் என்ன தெரியுமா? ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நீதிவிசாரணை.’ உள்ளூர் அமெரிக்கத் தொலைக்காட்சி சேனல்கள் புடைசூழ நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

பேராயர்கள் வாய்ட்டனிசாப், டைடுஜீத், உசாமா தக்தூக் ஆகியோர் விசாரனை நடத்துகிறார்கள். மோரிஸ் ஸாதிக், ஈலியா பாஸிலீ, ஈஹாப் யஅகூப் ஆகியோர் வழிநடத்துவோராகப் பங்கேற்கிறார்கள்.

செப்டம்பர் தாக்குதலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பொறுப்பாளராக ஆக்கவும் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தவும் அங்கே முயற்சி நடக்கிறது. வானிலிருந்து அருளப்பெற்ற தூதுத்துவம் இல்லை; மனிதக் கற்பனையே இஸ்லாம் என்று தீர்ப்பளித்த பேராயர்கள் நபி (ஸல்) அவர்கள்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகிறார்கள்.

‘அவர் பூமிக்குச் சாந்தியைக் கொண்டுவரவில்லை; மனிதர்களிடையே வெறுப்பை விதைத்தார்; இரத்தத்தை ஓட்டினார். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறோம்’ என்று பேராயர்கள் கூச்சலிட்டனர்; இது ‘முஹம்மத் மீதான நீதிவிசாரணைக்குரிய உலக நாள்’ என்று கொக்கரித்தனர்.

INNOCENCE OF MUSLIMS

Morris Sadek with Terry Jones
இந்நிகழ்ச்சி தொடங்குவதற்குமுன், நபி (ஸல்) அவர்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தும் ஒரு படத்தைத் திரையிடுவதற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். உத்தேச கிப்தி நாட்டின் உயர்மட்டக் குழுவின் தயாரிப்பே இப்படம். இஸ்மத் ஸக்லமா, மோரிஸ் ஸாதிக் ஆகியோரே இக்குழுவின் பொறுப்பாளர்கள். படத்தின் பெயர்: இந்நோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்).

மூன்று மணிநேரம் ஓடும் இப்படத்தைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் பிடித்தன. அரபி மொழியிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர் சாம் பாசைல் என்பவன் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த யூதன் ஆவான். ‘முஹம்மதின் குணாதிசியங்களைப் படமாக்க பிரபல இஸ்லாமிய நூல்களையே நான் முன்னோடியாகக் கொண்டேன்; அவை அவரது வாழ்க்கை குறித்துப் பேசுகின்றன’ என்று பச்சைப் பொய் பேசும் இந்த சாம், அவை இன்ன நூல்கள் என்று குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் இருந்துகொண்டு கற்பனைகளைக் கலந்து விஷத்தைக் கக்கியுள்ளான் என்பது உறுதியாகிறது.

‘அல்வ(த்)தன்’ நாளேட்டின் கையில் இப்படத்தின் ஒருபிரதி கிடைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் மற்றும் தோழர்கள் பற்றியும் வார்த்தையால் வடிக்க முடியாத மட்டரகமான காட்சிகள் படத்தில் நிறைந்துள்ளன.

படம் சொல்வதென்ன?

எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ டாக்டர் தன் மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது காட்டுமிராண்டிகள் தோற்றத்தில் சில முஸ்லிம்கள் திடீரென உள்ளே நுழைந்து மருத்துவமனையை அடித்து நொறுக்குகிறார்கள்; நோயாளிகளைக் கடுமையாகத் தாக்குகிறார்கள். இதையெல்லாம் தடுக்காமல் வெளியே நின்று எகிப்து போலீஸார் வேடிக்கை பார்க்கின்றனர்... என்று தொடங்குகிறது படம்.

டாக்டரிடம் இந்தக் கலகக்காரர்கள் யார் என்று அவருடைய மனைவியும் மகளும் கேட்கின்றனர். அவர் இவர்கள்தான் முஸ்லிம்கள்; முஹம்மதைப் பின்பற்றுபவர்கள். அவர் வரலாறு தெரியுமா என்று கேட்டு, நபியவர்களின் கதையைச் சொல்கிறார்.

படத்தைப் பற்றி அரபிமொழியில் நமக்குக் கிடைத்த எல்லா தகவல்களையும் என்னால் இங்கே குறிப்பிட இயலவில்லை. என் எழுதுகோல் எழுத மறுக்கிறது. சில காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்:

நபி (ஸல்) அவர்களையும் அவர்களுக்கு வந்த வேத அறிவிப்பான வஹீயையும் படம் கேலி செய்கிறது. அன்னை கதீஜா (ரலி) அவர்களை மலிவாகச் சித்தரிக்கிறது. கதீஜா (ரலி) அவர்களுடனும் வேறுசில துணைவியருடனும் நபியவர்கள் தனிமையில் இருந்த காட்சி என்று சொல்லி கேவலமாகவும் செக்சியாகவும் காட்டப்படுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் சிறுகுழந்தையாக இருந்தபோதே அவர்களை நபியவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள் என்று சொல்லி, நபியவர்கள் பெண்ணாசை பிடித்தவர் எனக் காட்டுகிறார்கள். மனைவிக்கு முன்னாலேயே ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அம்மனைவியுடன் உறவு கொள்வதாக ஒரு காட்சி.

ஒரு கழுதைதான், முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்பதைப் போன்று ஒரு காட்சி. திருக்குர்ஆன் ‘தவ்ராத்’ வேதத்தின் கலப்பு என்றும் ஒரு கிறித்தவப் பாதிரிதான் அதை வடிவமைத்தார் என்றும் படம் புளுகுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஒரு கண் குருடு என்பதுபோல் காட்டப்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, குழந்தைகளைக் கடத்தி அடிமைகளாக விற்றல் ஆகியவற்றையே தோழர்களுக்கு முஹம்மத் கற்பித்தார் என்ற மாபெரும் அபாண்டம் ஒன்றை படம் வெளியிடுகிறது.

அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் குர்ஆனையும் அவமானப்படுத்தியதற்காக ஒரு மூதாட¢டியை நபித்தோழர்கள் இருகால்களை இரு பக்கம் இழுத்துக் கிழிப்பதாக ஒரு காட்சி. இதன்மூலம், முஸ்லிம்களை சகிப்புத் தன்மை அற்றவர்கள் என்று படம் சித்தரிக்கிறது.

முடிவில் ஒரு போர்க்களக் காட்சி. அதில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு வாளை நபியவர்கள் ஏந்தியிருப்பதைப் போன்றும் ஆடையெல்லாம் இரத்தம் தோய்ந்திருப்பதைப் போன்றும் காட்டப்பட்டுள்ளது. தமக்கு முன்னாலுள்ள எல்லாரையும் கண்மண் தெரியாமல் வெட்டிச் சாய்க்கிரார்களாம்! நீங்களும் இவ்வாறே நடந்துகொள்ள வேண்டும் என்று முஸ்லிம்களுக்குப் போதிக்கிறார்களாம்!

செய்திக்காக இருந்தாலும், இவற்றையெல்லாம் என் கைப்பட எழுதியதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கிறேன்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ்!

என்னதான் வேண்டும் உங்களுக்கு?

உலக முஸ்லிம்களே! இக்காட்சிகளில் ஒன்றாவது உண்மையா? குர்ஆனிலோ ஹதீஸிலோ வரலாற்றிலோ அறிஞர்களின் உரைகளிலோ இதை நீங்கள் என்றாவது கேள்விப்பட்டதுண்டா? முழுக்க முழுக்க பொய்யிலும் பொய்யான காட்சிகளைப் படமாக்கி அரிப்பைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் யூதர்களும் கிறித்தவர்களும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது இதில்?

ஏன் இவர்களுக்கு இந்தக் கொலைவெறி? நம்மை உசுப்பேற்றி கலகங்களை உருவாக்க நினைக்கிறார்களா? அல்லது இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் வெறிபிடித்து அலைகிறார்களா? அல்லது எகிப்து போன்ற நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகிறார்களா?

உண்மையில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பதை இன்றுவரை உலக அரங்கில் அமெரிக்கா நிரூபிக்கவில்லை. அமெரிக்கா குற்றம் சாட்டிய சத்தாம் ஹுசைனையும் உசாமா பின் லேடனையும் கொன்று குவித்துவிட்டீர்களே! இன்னும் வெறி அடங்கவில்லையா? இராக்கையும் ஆப்கனையும் அதையொட்டி பாகிஸ்தானையும் சூறையாடி கொள்ளையடித்துவிட்டீர்களே! இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா?

இன்னும் எத்தனை முஸ்லிம்களைக் கொன்று, எத்தனை முஸ்லிம் நாடுகளைக் கொள்ளையடிக்கத் திட்டம்? சொல்லுங்கள்!

ஒன்றுமட்டும் நிச்சயம்! சியோனிஸ்டுகளையும் அமெரிக்கர்களையும் எதிர்க்கின்ற வல்லமையும் நெஞ்சுறமும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டு என்பதைத்தான் இவர்களின் சேட்டைகள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் உலகில் மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு முஸ்லிம்களையே இந்த ஷைத்தான்கள் குறிவைக்கக் காரணமென்ன?

இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்வோம்: யூதர்கள் என்ன? கிறித்தவர்கள் என்ன? யாராலும் இஸ்லாத்தையோ திருக்குர்ஆனையோ அசைக்க முடியாது. சில முஸ்லிம்களை நீங்கள் கொல்லலாம்; இஸ்லாத்தைக் கொல்ல முடியாது. காரணம், அது ஒன்றுதான் இன்றைக்கு இறைமார்க்கம்; அது ஒன்றுதான் சத்தியம்; அது ஒன்றுதான் வாழும் வாழ்க்கைநெறி.

இஸ்லாத்தைக் காக்கும் பொறுப்பை, அதை அருளிய இறைவனே ஏற்றுக்கொண்டிருக்கிறான். இறைவனோடு போர் தொடுக்கிறீர்களா? அழிந்துபோவீர்கள்! இந்தப் பார் உள்ளளவு, வானமும் பூமியும் உள்ளளவு, உலகம் அழியும்வரை இஸ்லாம் இருக்கும்.

இதோ வல்லோன் அல்லாஹ் அறிவிக்கிறான் கேளுங்கள்:
நிச்சயமாக இந்த அறிவுரையை (குர்ஆனை) நாமே அருளினோம். உறுதியாக இதை நாமே பாதுகாப்போம். (15:9)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமைநாள் நிகழாது. (முஸ்லிம்)
பூமியில் ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லப்படாத போதுதான் மறுமை நாள் நிகழும். (முஸ்லிம்)
அதாவது முஸ்லிம்கள் இருக்கும்வரை உலகம் அழியாது; உலகம் அழியாது இருக்கக் காரணமே ‘அல்லாஹ், அல்லாஹ்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள்தான்.

No comments:

Post a Comment